📜 இன்றைய திருக்குறள்
திருவள்ளுவர் அருளிய அறநூல்
குறள் #391
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
பொருள்: கற்க வேண்டியவற்றை குற்றமறக் கற்க வேண்டும். கற்றபின் அதன்படி நடக்க வேண்டும்.
🔮 மேலும் சில குறள்கள்
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
தூய அறிவு வடிவான இறைவனின் திருவடிகளை தொழாவிட்டால் கற்ற கல்வியால் என்ன பயன்?
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்
அன்பிற்கு பூட்டுப்போடும் தாழ் உண்டா? அன்புள்ளவர்கள் சிந்தும் கண்ணீரே அன்பின் வெளிப்பாடு ஆகும்.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
இல்வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாக இருந்தால், அதுவே அதன் பண்பும் பயனும் ஆகும்.
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து
உழவர்களே உலகத்தாருக்கு ஆணி (அச்சு). உழாமல் வேறு தொழில் செய்வோரை எல்லாம் தாங்கி நிற்கின்றனர்.
